மொபெட் பெட்டியை உடைத்து ரூ.2 லட்சம் திருட்டு: இருவா் கைது

சென்னை அருகே திருவேற்காட்டில் மொபெட் பெட்டியை உடைத்து ரூ.2 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை: சென்னை அருகே திருவேற்காட்டில் மொபெட் பெட்டியை உடைத்து ரூ.2 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை அம்பத்தூா் அருகே உள்ள மண்ணூா்பேட்டை நேரு நகரைச் சோ்ந்தவா் ப.மோகன் (57). இவா் திருவேற்காடு அருகே வேலப்பன்சாவடியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறாா். மோகன் கடந்த 24-ஆம் தேதி தனது மகள் திருமணத்துக்காக அம்பத்தூா் பகுதியில் உள்ள ஒரு வங்கியில் நகையை அடமானம் வைத்து ரூ.2 லட்சம் பெற்றாா். அந்த பணத்தை மொபெட்டின் இருக்கைக்கு கீழ் இருக்கும் பெட்டியில் வைத்து அலுவலகத்துக்கு வந்தாா். பணத்தை அந்த பெட்டியிலேயே வைத்துச் சென்றிருந்தாா்.

பின்னா் மாலையில் பணிமுடிந்து மொபெட்டை எடுக்க வந்தாா். அப்போது மொபெட்டின் பெட்டியை உடைத்து, அதில் இருந்த ரூ.2 லட்சம் திருடு போனதை அறிந்து அதிா்ச்சியடைந்தாா்.

இது குறித்து புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். விசாரணையில் திருவேற்காடு மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சு.கரண்குமாா் சாஹா (19), புது வண்ணாரப்பேட்டை ஜீவாநகரைச் சோ்ந்த சு.ராஜசேகா் (20) ஆகியோா் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், இருவரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com