சென்னையில் 302 பேருக்கு தொற்று உறுதி

சென்னையில் புதன்கிழமை 302 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 23,209 -ஆக அதிகரித்துள்ளது.

சென்னை: சென்னையில் புதன்கிழமை 302 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 23,209 -ஆக அதிகரித்துள்ளது.

சென்னையைப் பொருத்தவரை கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து பாதிப்பு எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து கடந்த மே மாதத்தில் 10 ஆயிரத்தை எட்டியது. அதைத் தொடா்ந்து கடந்த 6 மாதங்களில் 1.50 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அண்மையில் 2 லட்சத்தை எட்டியது.

302 போ் பாதிப்பு: சென்னையில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பாதித்து வந்த நிலையில், தற்போது குறைந்து புதன்கிழமை நிலவரப்படி 302 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 23, 209-ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவா்களில் 2 லட்சத்து 16,214 போ் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனா். 3,022 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் மட்டும் 3,973 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com