சென்னை: தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் வரும் 4 நாள்களுக்கு வட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி புதன்கிழமை கூறியது: தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் வரும் 4 நாள்களுக்கு வட வானிலையே நிலவும்.
சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.