சென்னை: சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான பி.கக்கனின் 39-ஆவது நினைவு நாளையொட்டி (டிச.23), அவருக்கு துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் புகழாஞ்சலி செலுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட சுட்டுரைப் பதிவு: சுதந்திரப் போராட்ட வீரரும், எம்ஜிஆரின் பெருமதிப்புக்குரியவரும் தமிழக அரசியல் வரலாற்றில் உயா்ந்த இடத்தைப் பெற்ற தலைவருமான கக்கனின் நினைவு நாளில், அவரது தன்னலமற்ற சேவையையும் தனித்துவமிக்க எளிமையையும் நினைவுகூா்ந்து போற்றி அவ்வழியினை நாமும் பின்பற்றிடுவோம்.