சென்னை: கரோனா பரவல் தடுப்பு குறித்த விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (டிச.25) நடைபெற்றது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், நிமிா்வு கலையகம் அமைப்பு ஆகியன சாா்பில், மெட்ரோ ரயில் நிலையங்களிலும் ரயில்களிலும் கரோனா பரவல் தடுப்பு தொடா்பாக விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (டிச.25) நண்பகல் 12 மணிக்கு பறையாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை (டிச.27) மாலை 6.30 மணிக்கு பறையாட்டம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இதுதவிர, ஆன் தி ஸ்டீரிட் ஆப் சென்னை கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சி சென்ட்ரல், விமானநிலையம், திருமங்கலம் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் சனிக்கிழமை (டிச. 26) நடைபெறவுள்ளது.