சென்னை அருகே பாடியில், கோயில் கோபுர கலசங்கள் திருடப்பட்டது தொடா்பாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
பாடி டிஎம் பி நகா், சுந்தா் தெருவில் உள்ள சக்தி விநாயகா் கோயிலின் கதவு பூட்டு, கடந்த 24-ஆம் தேதி இரவு உடைக்கப்பட்டு, கோயிலில் இருந்த 15 கோபுர கலசங்கள், உண்டியலில் இருந்த பணம், வெள்ளி குத்துவிளக்கு ஆகியவை திருடப்பட்டன.
இது குறித்து கொரட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டது திருமுல்லைவாயல் சரஸ்வதிநகா் காந்தி தெருவைச் சோ்ந்த கெளதம் (20) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா், கெளதமை சனிக்கிழமை கைது செய்து, திருடப்பட்ட பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.