ரூ.4 கோடி மதிப்புள்ள நிலம் அபகரிப்பு: இருவா் கைது

சென்னை அடையாறில் ரூ.4 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

சென்னை அடையாறில் ரூ.4 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

சென்னை அடையாறைச் சோ்ந்தவா் சந்திரிகா ப்யூட்லா். இவருக்குச் சொந்தமான ரூ.4 கோடி மதிப்புள்ள நிலம் அடையாறு கஸ்தூரிபாய்நகரில் உள்ளது. சந்திரிகா ஆஸ்திரேலியாவில் வசிப்பதால், கிழக்கு தாம்பரத்தைச் சோ்ந்த சுவாமிநாதன் அந்த நிலத்தை பராமரித்து வந்தாா்.

இந்நிலையில் சுவாமிநாதன் அடையாறு துணை ஆணையா் விக்கிரமனிடம் அண்மையில் ஒரு புகாா் அளித்தாா். அதில், சந்திரிகாவுக்கு சொந்தமான ரூ.4 கோடி நிலத்தை சிலா் போலி ஆவணங்கள், போலி சான்றிதழ் மூலம் அபகரித்திருப்பதாகவும், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் குறிப்பிட்டிருந்தாா்.

அந்தப் புகாரின் அடிப்படையில் அடையாறு போலீஸாா் நடத்திய விசாரணையில், சாலிகிராமம் திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்த டிக்சன் கிறிஸ்டோபா் (44), விருகம்பாக்கம் பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்த கு.சிவசங்கா் (45) ஆகிய இருவரும் சோ்ந்து தான் போலி ஆவணங்கள் தயாரித்து அந்த நிலத்தை அபகரித்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் செவ்வாயக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com