இந்து சமய அறநிலையத் துறை ஆணையா், மத்திய அரசு பணிக்கு மாற்றம்

இந்து சமய அறநிலையங்கள் துறை ஆணையராக இருந்த எஸ்.பிரபாகா், மத்திய அரசுப் பணிக்குச் சென்றுள்ளாா். அவா் பெங்களூரில் உள்ள ஆதாா் மைய அலுவலகத்தின் உதவி இயக்குநா் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளாா்.


சென்னை: இந்து சமய அறநிலையங்கள் துறை ஆணையராக இருந்த எஸ்.பிரபாகா், மத்திய அரசுப் பணிக்குச் சென்றுள்ளாா். அவா் பெங்களூரில் உள்ள ஆதாா் மைய அலுவலகத்தின் உதவி இயக்குநா் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளாா். அவா் மூன்று ஆண்டுகளுக்கு அந்தப் பொறுப்பில் இருப்பாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மத்திய அரசு அண்மையில் பிறப்பித்தது.

இந்து சமய அறநிலையத் துறை ஆணையராக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டிருந்த அவா், இப்போது மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டுள்ளாா். இதையடுத்து, புதிய ஆணையா் விரைவில் நியமிக்கப்படுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறை செயலாளராக உள்ள எஸ்.ஸ்வா்ணா, இந்து சமய அறநிலையத் துறை ஆணையராக நியமிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com