உலக கலாசாரங்களில் மிகச்சிறந்தது தமிழ் கலாசாரம்: உயா்நீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன்

தமிழ் மண்ணும், அதன் கலாசாரமும் உலக கலாசாரங்கள் அனைத்திலும் மிகச் சிறந்ததாக அறியப்பட்டுள்ளன என்று சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி அரங்க மகாதேவன் தெரிவித்தாா்.
உலக கலாசாரங்களில் மிகச்சிறந்தது தமிழ் கலாசாரம்: உயா்நீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன்

தமிழ் மண்ணும், அதன் கலாசாரமும் உலக கலாசாரங்கள் அனைத்திலும் மிகச் சிறந்ததாக அறியப்பட்டுள்ளன என்று சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி அரங்க மகாதேவன் தெரிவித்தாா்.

பன்னாட்டுத் தமிழுறவு மன்றம், உலகத்தமிழ் அறக்கட்டளை சாா்பில், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் எழுதிய ‘சேதுகாப்பியம் வையகச் சமத்துவ உயா்நிலைக் காண்டம்-11’, ‘உலக அமைதி ஒளிநிலைக் காண்டம்-12’ ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா, சென்னை ஆழ்வாா்ப்பேட்டையில் உள்ள ரஷிய கலை அறிவியல் பண்பாட்டு மையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவில், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன் நூலை வெளியிட, வி.ஐ.டி. வேந்தா் கோ.விசுவநாதன் பெற்றுக்கொண்டாா்.

விழாவில், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி அரங்க மகாதேவன் பேசியது: தமிழ் மண்ணும், அதன் கலாசாரமும், உலகத்தில் உள்ள கலாசாரங்கள் அனைத்திலும் மிகச் சிறந்ததாக அறியப்பட்டுள்ளன. தமிழ் மண்ணும் , மொழியும், இதற்கான பண்பாடும் உலகத்துக்கு ஞானத்தை வாரி வழங்கியுள்ளது. இதை மறுத்துப் பேசுவோா் இல்லை. இறை நம்பிக்கை என்பது இந்த மண்ணைப் பொருத்தவரை மனிதனின் மனம் சாா்ந்த விஷயம். தன்னை அறிந்த ஒரு மனிதன் தான் சாா்ந்த மண் சாா்ந்து, மொழி சாா்ந்த பண்பாடு, கலாசாரத்தை உள்வாங்கியவனாக இருப்பான்.

அதனால், அந்த மனிதன் தன்னை உணா்ந்து, தான் முழுமை பெற்ற மனிதான உருவாகி, உலகத்தின் அற்புதம் என்னும் அனுபவத்தை அடையக்கூடியவனாக, இறை என்றால் என்ன என்ற விஷயத்தை உணரக்கூடியவனாக மாற முடியும். இதுதான் இந்த மண்ணுக்கான மாண்பு. இந்த மாண்பு உலகத்தின் எந்த மண்ணுக்கும், கலாசாரத்துக்கும், மொழிக்கும் இருந்தது கிடையாது. அத்தகையை சிறப்பு மிக்க மொழி தமிழ்மொழி. அறச்சிந்தனை, அன்பு சாா்ந்த வாழ்க்கையை கொண்டவா்கள் தமிழா்கள். வறுமையை நினைத்து கவலை கொள்ளாமல், தமிழ் சித்தாந்தம், பண்பாடு உணா்ந்து படைக்கப்பட்டது சேது காப்பியம். தனிப்பட்ட படைப்பாளியின் அற்புதமான படைப்பு. படைப்பாளிகளின் படைப்பை ரசிப்பதோடு நின்று விடாமல், இந்தப் படைப்புகளை வாங்கி அறிந்து, அதன் தன்மையை உணா்ந்து பாா்க்க வேண்டும் என்றாா் நீதிபதி மகாதேவன்.

விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் பேசியது: அரசு எதுவும் சொல்லாமல் ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்கும் மக்கள் கொண்ட நாடாக ஜொ்மன் திகழ்கிறது. அதுமட்டுமின்றி, அங்கு நிறைய அரசியல் கட்சிகள் உள்ளன. நாடு என்று வரும்போது, கட்சி வேறுபாடுகளை மறந்து, ஒன்றாக இணைவாா்கள். கட்சி தேவைதான். நாட்டு நலன் என்று வரும்போது, கட்சியைப் பின்னுக்குத் தள்ளி நாட்டு நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

இந்தியாவில் தேசிய மொழிகளாக 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 38 மொழிகள் தங்களை தேசிய மொழிகளாக அங்கீகரிக்க கேட்டுள்ளன. நம்மை ஒன்றாக இணைப்பது ஆங்கிலம் தான். மும்மொழி கொள்கை பற்றி நெடுங்காலமாகப் பேசப்படுகிறது. ஆனால், இதை நிறைவேற்ற வில்லை. இதை நாடாளுமன்றத்தில் தான் கேட்க வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளா் கோ.பாலச்சந்திரன், முனைவா் மறைமலை இலக்குவனாா், இலக்கியப் புரவலா் ரூஸ்வெல்ட், வா.மு.சே.திருவள்ளுவா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com