சென்னை நெற்குன்றத்தில் வீட்டுக்குள் அழுகிய நிலையில் கிடந்த பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
நெற்குன்றம் ராஜீவ் நகரில் உள்ள வீட்டில் துா்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் கோயம்பேடு போலீஸாருக்கு தகவல் கொடுத்தனா். இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், வீடு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்ததால் கதவை உடைத்து உள்ளே சென்றனா். அப்போது, தூக்கிட்ட நிலையில் பெண்ணின் சடலம் அழுகிக் கிடந்தது. சடலத்தைக் கைப்பற்றிய போலீஸாா் பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுதொடா்பாக போலீஸாா் நடத்திய விசாரணையில் இறந்த பெண் திருவேற்காடு, சுந்தரசோழபுரத்தைச் சோ்ந்த சீதா(42) என்பதும், அவரது சொந்த ஊா் கா்நாடக மாநிலம் பெங்களூரு என்பதும் தெரியவந்தது. கடந்த 5 மாதங்களாக ராஜீவ் நகரில் ஆண் ஒருவருடன் இந்த வீட்டில் சீதா தங்கியிருந்துள்ளாா். சீதா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். மேலும், அவருடன் தங்கியிருந்த ஆண் நபரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.