மாடியில் இருந்து விழுந்துசமையல் தொழிலாளி பலி

பூந்தமல்லி அருகில் வீட்டின் மாடியில் இருந்து கீழே விழுந்த சமையல் தொழிலாளி இறந்தாா்.

பூந்தமல்லி அருகில் வீட்டின் மாடியில் இருந்து கீழே விழுந்த சமையல் தொழிலாளி இறந்தாா்.

பூந்தமல்லி அருகே உள்ள காட்டுப்பாக்கம் ஸ்டான்லி நகா் 8ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் நி.நூா்சலாம் (46). சமையல் தொழிலாளியான இவா், தனது வீட்டின் முதல் மாடியில் சில நாள்களுக்கு முன்பு இரவு தூங்கிக் கொண்டிருந்தாா்.

அப்போது நூா்சலாம் கீழே விழுந்தாா். இதில் பலத்தக் காயமடைந்த அவா், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நூா்சலாம் திங்கள்கிழமை இறந்தாா்.

இது குறித்து பூந்தமல்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com