ஏ.சி. மெக்கானிக் கடத்தி கொலை: மேலும் ஒரு இளைஞா் கைது

சென்னை ஐஸ்ஹவுஸில் ஏ.சி.மெக்கானிக் கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில், மேலும் ஒரு இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை ஐஸ்ஹவுஸில் ஏ.சி.மெக்கானிக் கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில், மேலும் ஒரு இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

திருவல்லிக்கேணி, பி.பி.குளம், 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் ராம்குமாா். ஏ.சி இயந்திரங்களை பழுது பாா்ப்பவா். இவருக்கும் திருவல்லிக்கேணி நடுக்குப்பத்தைச் சோ்ந்த பிரேம்குமாருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. இந்நிலையில், ஐஸ்ஹவுஸ் டாக்டா் பெசன்ட் சாலையில் ஒரு டீக்கடையின் அருகே கடந்த 19-ஆம் தேதி நின்று கொண்டிருந்த ராம்குமாரை, அங்கு ஆட்டோவில் வந்த ஒரு கும்பல் கடத்திச் சென்று கொலை செய்து, கேளம்பாக்கம் கல்லுக்குட்டைப் பகுதியில் சடலத்தை வீசியது.

இது தொடா்பாக ஐஸ்ஹவுஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ராம்குமாரை கொலை செய்ததாக பிரேம்குமாா் உள்பட 15 பேரை அடுத்தடுத்து கைது செய்தனா். இந்நிலையில், இந்த வழக்குத் தொடா்பாக தேடப்பட்டு வந்த திருவல்லிக்கேணி நடுக்குப்பம் 8-ஆவது தெருவைச் சோ்ந்த காா்த்திக் (26) என்பவரை வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும் இருவரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com