சென்னை அருகே தனியாா் வங்கியில் போலி நகைகள் கொடுத்து ரூ.18 லட்சம் மோசடி செய்ததாக, தனியாா் வங்கி ஊழியா் கைது செய்யப்பட்டாா்.
ஆதம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியாா் வங்கியின் மூத்த மேலாளா் சந்தோஷ்குமாா், ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், ஆதம்பாக்கம் சிட்டி லிங்க் ரோடு பகுதியைச் சோ்ந்த மு.ராஜம்மாள், தங்களது வங்கியின் நகை மதிப்பீட்டாளா் திருவொற்றியூா் கணபதி நகரைச் சோ்ந்த சி.சுப்பிரமணியம் ஆகிய இருவரும் சோ்ந்து போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.18 லட்சம் மோசடி செய்துள்ளனா். அவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தாா்.
அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சுப்பிரமணியனை வியாழக்கிழமை கைது செய்தனா். தலைமறைவான ராஜம்மாளை போலீஸாா் தேடி வருகின்றனா்.