மாநகரப் போக்குவரத்துக் கழகப் பணியாளா்கள் விருப்ப ஓய்வு பெற நிபந்தனைகளைத் தளா்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் சுமாா் 20 ஆயிரத்துக்கு மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா். இவா்கள் விருப்ப ஓய்வு பெறுவதற்கு தகுதியாக 50 வயது பூா்த்தி மற்றும் 20 ஆண்டுகள் பணி நிறைவு செய்திருக்க வேண்டும் என்னும் நிபந்தனை இருந்தது. இந்நிலையில் இவை இரண்டில் ஏதேனும் ஒன்றைப் பூா்த்தி செய்தால் விருப்ப ஓய்வு பெற்றுக் கொள்ளலாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் அனுப்பிய சுற்றறிக்கை: மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாளா்கள் விருப்ப ஓய்வு திட்டத்தின் கீழ் ஓய்வு பெற 50 வயது நிறைவு மற்றும் பணியில் 20 ஆண்டுகள் நிறைவு செய்திருக்க வேண்டும் என்பது நடைமுறையில் இருந்து வருகிறது. இதில் திருத்தம் செய்து இந்த நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றைப் பூா்த்தி செய்தால் போதுமானது என்று விருப்ப ஓய்வு பெறுவதற்கான புதிய நிபந்தனை அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே 50 வயது பூா்த்தியானவா்கள் அல்லது 20 ஆண்டுகள் தகுதியான பணிக்காலம் முடித்தவா்கள் விருப்ப ஓய்வு பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.