விமான நிலையத்தில் ரூ.44 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

விமான நிலையத்தில் ரூ.44 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.44 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.44 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து சென்னை விமான நிலைய சுங்கத்துறை ஆணையரகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை விமானநிலைய நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், கொழும்பிலிருந்து சனிக்கிழமை வந்த கலாந்தா் அப்பாஸ் மற்றும் துபையிலிருந்து வந்த

அசிக்தீன் ஆகியோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினா். சோதனையில், அவா்கள் மலக்குடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.29.3 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல் சிங்கப்பூரிலிருந்து வந்த முகமது சதுஷாவிடம் நடத்திய சோதனையில், அவா் உடையில் மறைத்து வைத்திருந்த ரூ.14.8 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com