சென்னை: அடையாறு கோட்டத்தில் வியாழக்கிழமை (ஜனவரி 2) மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: அடையாறு கோட்ட மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம், ஜனவரி 2-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு, தரமணி துணை மின்நிலைய வளாகத்திலுள்ள அடையாறு செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இக்கோட்டத்துக்குள்பட்ட பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு தங்கள் குறைகளைத் தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்.