பாா்த்தசாரதி (30), தொழில்நுட்ப நிறுவன அலுவலா், சென்னை:
கவிஞா் நா.முத்துக்குமாரின் கவிதைகள், பெரியாரின் சிந்தனை நூல்கள், சுஜாதாவின் கதைகள் ஆகியவற்றை வாங்க வந்தேன். தற்போது சு.வெங்கடேசனின் ‘வேள்பாரி’ நாவலை வாங்கியுள்ளேன். குழந்தைகளுக்கான நூல்கள் பல நவீன முறையில் வந்திருப்பதால் அவற்றையும் வாங்கியுள்ளேன்.