பொங்கல் விடுமுறை காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜன. 14) வண்டலூா் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவா் செயல்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னையை அடுத்த வண்டலூரில் அமைந்துள்ள அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா, கிண்டியில் உள்ள சிறுவா் பூங்கா பராமரிப்பு காரணமாக வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், பொங்கல் விடுமுறை காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜன. 14) வண்டலூா் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவா் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.