சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கடத்தி வரப்பட்ட அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த 2 வயது குழந்தையை திண்டுக்கல் ரயில் நிலையத்தில் போலீஸார் திங்கள்கிழமை இரவு மீட்டனர். மும்பை விரைவு ரயில், திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு திங்கள்கிழமை இரவு 8 மணிக்கு வந்தது. அந்த ரயிலில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த தீபக் மண்டல் (32), அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த சிறுவன் தியூக்கை (2) கடத்தி வந்தது தெரிய வந்தது. குழந்தையை மீட்ட போலீஸார், அவர் குழந்தையை எதற்காக கடத்தி வந்தார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.