முகம்மது ஷாகித் (24), சட்டக் கல்லூரி மாணவா், மண்ணடி
பெரியாரின் ‘ஆகஸ்ட் 15’, அவரது வாழ்க்கை வரலாறு மற்றும் அம்பேத்கரின் வாழ்க்கை குறித்த புத்தகங்களை வாங்கிச்செல்கிறேன். மேலும், பூமணியின் ‘வெக்கை’ நாவலையும், வலம்புரி ஜானின் ‘வணக்கம்’ கட்டுரைத் தொகுப்பையும் வாங்கிச் செல்கிறேன். அத்துடன், காஸ்ட்ரோவின் ‘போராடுவது கடமை’, லெனின் ‘லெனினிசம்’, ‘ஆரம்பகட்ட முதலாளித்துவமும், தமிழ்ச்சமூக மாற்றமும்’ உள்ளிட்ட புத்தகங்களை வாங்கிச்செல்கிறேன்.