இறையமுது(11), 6-ஆம் வகுப்பு, துரையூா், திருச்சி:
பஞ்சதந்திரக் கதைகள், நீதிக்கதைகள், தெனாலிராமன் கதைகள் ஆகியவற்றை வாங்க நினைத்து வந்து அனைத்தையும் வாங்கியுள்ளேன். மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறை அறிவதற்காக சத்தியசோதனையை வாங்கிச் செல்கிறேன். சரித்திர நூல்கள் ரொம்பப் பிடிக்கும் என்பதால் அவற்றை வாங்க உள்ளேன்.