பதிப்பகம்-நற்றிணை, விலை ரூ.350, பக்கம்-320, ஆசிரியர்- மராத்திய எழுத்தாளர் விலாஸ் சாரங், தமிழில்- ஆனந்த் ஸ்ரீனிவாசன், மூலநூலாசிரியரின் 30-க்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுப்பாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழில் கதை முடிவில் அதிர்ச்சி தரும் முடிவை அளிக்கும் ஜெயகாந்தனைப் போலவே விலாஸ் சாரங்கின் கதைகளும் அதிர்ச்சியூட்டுபவைகளாக உள்ளன.
புரட்சிக்கு அஞ்சிய ராணுவத் தளபதி, பசிக்காக தன்னை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திக் கொண்ட அப்பாவிப் பெண் என தொகுப்பு முழுவதும் துணிச்சலான கருத்துகளை, நூலைப் படிப்போர் பதறும் வகையில் கதைகூறுபவராக விலாஸ் சாரங் விளங்குவதை கதைகள் அனைத்திலும் உணரமுடிகிறது.