மகாகவி பாரதியின் படைப்புகளை உள்வாங்கினால் சமூகம் மேம்படும்

மகாகவி பாரதியின் படைப்புகளை உள்வாங்கிப் படிக்கும் சமுதாயம் முன்னேறும். அவரது படைப்புகளை படிப்போர் தவறான பாதைக்குச் செல்லமாட்டார்கள் என்றார் திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான்.
சென்னை புத்தகக் காட்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் திருச்சி காவல் கண்காணிப்பாளர்  செந்தில்குமார் எழுதிய 'பெரிதினும் பெரிது கேள்' நூலை பெற்றுக் கொள்கிறார்  திரைப்பட இயக்குநர் தங்கர் பச்ச
சென்னை புத்தகக் காட்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் திருச்சி காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் எழுதிய 'பெரிதினும் பெரிது கேள்' நூலை பெற்றுக் கொள்கிறார் திரைப்பட இயக்குநர் தங்கர் பச்ச


சென்னை: மகாகவி பாரதியின் படைப்புகளை உள்வாங்கிப் படிக்கும் சமுதாயம் முன்னேறும். அவரது படைப்புகளை படிப்போர் தவறான பாதைக்குச் செல்லமாட்டார்கள் என்றார் திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான்.
சென்னை புத்தகக் காட்சியில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் த.செந்தில்குமார் எழுதிய "பெரிதினும் பெரிது கேள்' எனும் விகடன் பிரசுர நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவில் நூலின் முதல் படியைப் பெற்றுக்கொண்டு அவர் பேசியதாவது: புத்தகச் சந்தை என்றே புத்தகக் காட்சியை அழைக்க வேண்டும். புத்தகங்கள் படிப்பதற்கானவையே தவிர பார்வைக்கான காட்சிப்படுத்தும் பொருள் அல்ல என்பதை உணரவேண்டும். பாரதியின் படைப்புகளைப் படித்தே நூலாசிரியர் முதல் நல்ல எழுத்தாளர், படைப்பாளிகள் அனைவரும் உருவாகியுள்ளோம். பாரதி படைப்புகளை உள்வாங்கி படிக்கும் சமூகம் முன்னேறும் என்பதில் சந்தேகமில்லை. அறிவு என்பது பாடப் புத்தகத்தில் இல்லை. காலத்தால் அழியாத புத்தகங்களைப் படைத்தவர்கள் பள்ளிக்கூடம் சென்று படித்தவர்கள் அல்ல என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.
கிராமங்களில் தமிழ்வழிக் கல்வியில் படித்தவர்களே சமூக முன்னேற்றத்துக்கு பயன்படுவோராகத் திகழ்கின்றனர். புத்தகங்கள் நம்மை பேச வைக்கும். சிந்தனையை வளர்த்து தன்னம்பிக்கை கொடுக்கும். ஆனால், தற்போது இலக்கியம் படிப்போர் மிகக்குறைந்தே உள்ளனர். நகைச்சுவை நடிகர்கள் வாங்கும் ஒரு நாள் ஊதியத்தை தமிழ் எழுத்தாளர்கள் வாழ்நாள் முழுவதும் எழுதினாலும் சம்பாதிக்க முடியாத நிலையே ஏற்படுகிறது என்றார்.
நிகழ்ச்சியில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பழ.கருப்பையா பேசியது: திருக்குறளே தமிழர் முகமாகும். வள்ளுவர் இல்லாவிட்டால் உலகில் தமிழரின் முகம் தெரியாமலே போயிருக்கும். உலகில் முன்பின் தொடர்ச்சியான மொழியாகத் தமிழ் உள்ளது. அதன் வரிவடிவம் மாறினாலும், ஒலி வடிவம் மாறாமலிருப்பது சிறப்பாகும். தமிழின் அடிப்படையானது தொல்காப்பியம். தனித்தமிழ் வளர்த்த மறைமலையடிகள், அண்ணா போன்றோர் வழியில் தமிழை வளர்க்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சிக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஏ.அண்ணாதுரை தலைமை வகித்தார். "பெரிதினும் பெரிது கேள்' நூலை எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் வெளியிட்டார். இதில் சென்னை மண்டல அமலாக்கத்துறை இணை இயக்குநர் வி.மாணிக்கவேல், ஆவடி நகராட்சி ஆணையர் ரவிசங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் நூலாசிரியர் செந்தில்குமாரின் பள்ளி ஆசிரியர் எம்.செல்வராஜ் மற்றும் அவரது தாயார் ஆகியோர் கெளரவிக்கப்பட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com