புத்தகக் காட்சி இன்று (21.01.2020):  நிறைவு விழா

புத்தகக் காட்சி இன்று (21.01.2020):  நிறைவு விழா



தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி)- சென்னை 43-ஆவது புத்தகக் காட்சி நிறைவு விழா மற்றும் பதிப்புத் துறையில் 25 ஆண்டுகள் சேவை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கல்:

விருதுகள் வழங்கி நிறைவுப் பேருரையாற்றுபவர்- தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சிறப்புரை: முன்னாள் அமைச்சர் வைகை செல்வன், வரவேற்பு- பபாசி தலைவர் ஆர்.எஸ்.சண்முகம், நன்றி- பபாசி செயலர் எஸ்.கே.முருகன், புத்தகக் காட்சி வளாகம், ஒய்.எம்.சி.ஏ.மைதானம், நந்தனம், மாலை 6.

எழுத்தாளர் முற்றம்: பொன்னீலனின் படைப்புகளை அறிமுகம் செய்து உரையாற்றுபவர் க.பஞ்சாங்கம், எழுத்தாளர் இளம்பிறையின் படைப்புகளை அறிமுகம் செய்து உரையாற்றுபவர் எழுத்தாளர் இரா.தெ.முத்து, சென்னை 43- ஆவது புத்தகக் காட்சி வளாகம், ஒய்.எம்.சி.ஏ. மைதானம், நந்தனம், மாலை 6. 


குறும்படம் திரையிடல்: புதிய குறும்பட இயக்குநர்களின் குறும்படங்கள் திரையிடல், பட விளக்கம், திரைக்காட்சிக்கூடம், புத்தகக் காட்சி வளாகம், ஒய்.எம்.சி.ஏ. மைதானம், மாலை 5.30.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com