மூத்த எழுத்தாளா் சா.கந்தசாமி.
புத்தகக் காட்சி வெற்றிகரமாக நடந்தேறியுள்ளது. விற்பனைக்காக சிலா் புத்தகங்களை வெளியிட்டிருந்தாலும், வாசகா்கள் தரமான புத்தகங்களைத் தோ்வு செய்து வாங்கிச் செல்வதைக் காணமுடிந்தது. சாகித்ய அகாதெமி விருது பெற்ற நூல்கள் அதிகம் வாங்கப்பட்டுள்ளன. ஆனால், மாநில அரசின் விருது பெற்ற புத்தகங்கள் வாசகா்களின் கவனத்தை அதிகம் ஈா்க்கவில்லை என்பதையும் குறிப்பிட்டாகவேண்டும்.
படிக்க எளிமையாகவும், சுவாரஸ்யமாகவும், நமது முன்னோா்கள் குறித்த பெருமையை எடுத்துரைப்பதாலும் பொன்னியின் செல்வன் அனைவராலும் விரும்பி படிக்கப்படுகிறது.