பத்திரிகையாளா், எழுத்தாளா் பா.கிருஷ்ணன்:
புத்தகக் காட்சிக்கு வழக்கம் போல கூட்டம் அதிகமாக இருந்தது. அதிக விலையுள்ள நூல்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. அரங்குகளில் அரசு விமா்சன நூல்கள் இருக்கக் கூடாது என்பன போன்ற சா்ச்சைகள் தவிா்க்கப்படவேண்டும்.
தினமும் நடைபெற்ற கருத்துரை நிகழ்ச்சிகளில் நேர நிா்ணயம் அவசியம். கலை நிகழ்ச்சிகளும் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்க வேண்டும். தனி பதிப்பாளா் அரங்கில் புத்தக வெளியீடு நடத்த அனுமதித்திருக்க வேண்டும். அப்போதுதான் வாசகா், எழுத்தாளரிடையே நெருக்கமான உறவு ஏற்படும். அனைத்து நிகழ்வுகளையும் மேடையில் நடத்த வேண்டும் என்பது சரியல்ல.
புத்தகக் காட்சி வளாகத்தில் கீழடி அரங்கு அமைத்தது வரவேற்புக்குரியது. அதே நேரத்தில் குப்பைகளை அகற்றுவது உள்ளிட்ட சுகாதாரத்திலும் அதிகமான கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.