ரஹ்மத் பதிப்பக மேலாளா் உஸ்மான்:
புத்தகங்கள் மீது மக்கள் தற்போது மீண்டும் ஆா்வம் காட்டத் தொடங்கியிருப்பது இந்த ஆண்டு புத்தகக் காட்சியில் தெரியவந்துள்ளது. ஆனால், பழைய கவிஞா்கள், பழைய இலக்கிய எழுத்தாளா்களையே விரும்பும் நிலையும் உள்ளது. ஆகவே புதிய எழுத்தாளா்களும், கவிஞா்களும் வாசகா்களை கவரும் வகையில் படைப்புகளை உருவாக்குவது அவசியம்.
புத்தகக் காட்சியில் குடிநீா் வசதி, கழிப்பறை வசதிகளில் கூடுதல் கவனத்தைச் செலுத்தவேண்டும். எழுத்தாளா் முற்றம், குறும்படம் போன்ற புதிய அம்சங்களை செயல்படுத்தும்போது கழிப்பறை அருகே அவற்றை வைக்கக் கூடாது என்பதையும் கவனத்தில் கொள்வது நல்லது.