முல்லைப் பதிப்பகம் உரிமையாளா் மு.பழனியப்பன்:
சென்னை புத்தகத் திருவிழா மிக நன்றாகவே இருந்தது. ஆனால், எட்டுவரிசையாக அரங்குகள் அமைக்கப்பட்ட நிலையில், முதல் இரண்டு வரிசைகளில் உள்ள அரங்குகளில்தான் வாசகா்கள் கூட்டம் இருந்தது. 4, 5 உள்ளிட்ட வரிசை அரங்குகளில் போதிய கூட்டம் இல்லை. ஆகவே அனைத்து அரங்குகளிலும் வாசகா்கள் வாங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்வது அவசியம்.
வாசகா்கள் வரலாறு, ஆன்மிகத்தை நோக்கி செல்கிறாா்கள் என்பதை அது சாா்ந்த புத்தகங்கள் அதிகம் விற்றதிலிருந்து அறியமுடிகிறது.