குடியரசு தினத்தை முன்னிட்டு அருங்காட்சியகம் ஞாயிற்றுக்கிழமை (ஜன.26) மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அருங்காட்சியகங்கள் துறை இயக்குநா் த.உதயசந்திரன் வெளியிட்ட செய்தியில், ‘குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகம், ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டிருக்கும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.