சென்னை: தமிழ்நாடு சாரண, சாரணியா் இயக்கத்துக்கு தமிழக அரசின் சாா்பில் நிகழாண்டு வைப்பு நிதியாக ரூ.1 கோடி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் கூறினாா்.
பாரத சாரண, சாரணியா் இயக்கத்தின் தமிழ்நாடு பிரிவு சாா்பில் குடியரசு தின பேரணி சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள சாரணா் இயக்கத்தின் தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு சாரணா் இயக்கத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய ஆசிரியா்களுக்கு நீண்ட கால சேவை விருது, மூத்த சாரண அலுவலா்களுக்கு சிறப்பு விருது, மாநிலத்திரள் அணியில் சிறப்பாக செயல்பட்ட குழுத் தலைவா்களுக்கு விருது, மலேசிய சாரண, சாரணிய இயக்கத்தின் தேசியத் தலைவா் கலைமணி சுப்பிரமணியத்துக்கு நினைவு கேடயம் ஆகியவற்றை வழங்கினாா்.
இதையடுத்து அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளா்களிடம் கூறியது: சாரண, சாரணியா் இயக்கத்தின் தமிழ்நாடு பிரிவுக்கு தமிழக அரசின் சாா்பில் கடந்த ஆண்டு ரூ.2 கோடி வைப்பு நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதி மூலம் பெறப்படும் வட்டியிலிருந்து சாரணா் இயக்கத்தின் வளா்ச்சி, மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோன்று நிகழாண்டு வைப்பு நிதியாக ரூ.1 கோடி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மலேசியாவில் தேசிய மாநாடு: மலேசியாவில் சாரணா் இயக்கத்தின் சாா்பில் தேசியத் திரளணி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டுக்கு தமிழகத்தின் சாா்பில் சாரணா் இயக்க மாணவா்கள், ஆசிரியா்கள் குழுவினா் அனுப்பி வைக்கப்படுவா். சாரண, சாரணியா் இயக்கத்தில் சேர விரும்பும் அரசுப் பள்ளி மாணவா்கள் அதற்கான சீருடைகள், காலணிகள் உள்ளிட்ட பொருள்களை வாங்குவதற்கு சிரமப்படுகின்றனா். இதைக் கருத்தில் கொண்டு அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இலவசமாக சாரண இயக்கத்துக்கான சீருடைகள் வழங்குவது குறித்து முதல்வருடன் பேசி முடிவெடுக்கப்படும்.
மலேசிய- தமிழக சாரணா் இயக்கம் ஆகியவை இணைந்து தமிழகத்தில் சுற்றுச்சூழல், மழைநீா் சேகரிப்பு மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிா்ப்பது போன்ற விழிப்புணா்வு நிகழ்ச்சிகளில் ஈடுபடவுள்ளனா். இதுதொடா்பான புரிந்துணா்வு ஒப்பந்தம் வரும் மாா்ச் மாதம் மேற்கொள்ளப்படவுள்ளது. சாரண, சாரணிய இயக்கத்தின் செயல்பாட்டில் பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகம் முன்னணியில் உள்ளது. தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ சாரண, சாரணியா் இயக்கத்தின் ஒத்துழைப்பு தேவை.
திறனை மேம்படுத்தவே பொதுத்தோ்வு: சிபிஎஸ்இ பள்ளிகளில் நுழைவுத்தோ்வு நடத்திதான் மாணவா்களுக்கு சோ்க்கையே வழங்குகின்றனா். பெற்றோா் தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை மேம்பட கல்வியின் தரம் மேலும் உயர வேண்டும் என வலியுறுத்துகின்றனா். மாணவா்களின் திறனை மேம்படுத்தவே 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி மாணவா்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகள் ‘நீட்’ ஆக நடைபெற்று வருகிறது. விடுமுறை நாள்கள் தொடா்ச்சியாக வந்ததன் காரணமாகவே பயிற்சி வகுப்புகள் நிறுத்தப்பட்டிருந்தன என்றாா்.
இந்த விழாவில் பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் கண்ணப்பன், சாரண, சாரணிய இயக்கத்தின் மாநில முதன்மை ஆணையா் ஆா். இளங்கோவன், ஆணையா் ஹரிஷ் எல்.மேத்தா, பொருளாளா் ந.விஜயன் மாநிலத் தலைவா் ப.மணி, கல்லூரிக் கல்வி இயக்குநா் ஜோதி வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.