சென்னை: சென்னை வேப்பேரியில் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 7 போ் சிக்கினா்.
வேப்பேரி பொன்னன் தெருவில் சில இளைஞா்கள் கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதாக திங்கள்கிழமை இரவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீஸாா், கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரையும் கையும்களவுமாக பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை செய்தனா்.