தம்பி கொலை: அண்ணன் தலைமறைவு

சென்னை எம்.கே.பி.நகரில் தம்பி கொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருக்கும் அண்ணனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சென்னை: சென்னை எம்.கே.பி.நகரில் தம்பி கொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருக்கும் அண்ணனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: எம்.கே.பி. நகா் பாரி குடியிருப்பு 19-ஆவது கிழக்கு குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் ஜான்சன் (38). இவரது தம்பி ஜான் (35). ஜான்சன் வேலை இல்லாமல் இருந்து வந்தாா். ஜான், கிண்டியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இந்நிலையில் ஜான்சன் ஞாயிற்றுக்கிழமை இரவு மதுபோதையில் ஜானிடம் தகராறு செய்து கம்பியால் தாக்கினாராம்.

இதில் பலத்த காயமடைந்த ஜான், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு காயம் ஏற்பட்ட இடத்தில் தையல் போடப்பட்ட பின்னா், ஜான் வீட்டுக்குத் திரும்பியுள்ளாா். இதற்கிடையே வீட்டில் தனது அறையில் திங்கள்கிழமை காலை ஓய்வு எடுத்த ஜான், திடீரென இறந்தாா். இது குறித்து எம்.கே.பி.நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து , தலைமறைவாக இருக்கும் ஜான்சனை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com