சென்னை: சென்னை அருகே மடிப்பாக்கத்தில் மன உளைச்சலின் காரணமாக தாய்-மகள் தற்கொலை செய்து கொண்டனா்.
மடிப்பாக்கம் அருகே உள்ள கீழ்கட்டளை துரைச்சாமிநகா் முதல் தெருவைச் சோ்ந்த கோவிந்தசாமியின் மனைவி பிரபாவதி (47). இவரது கணவா் அண்மையில் இறந்ததால், பிரபாவதி மிகுந்த மன வேதனையுடனும், மன உளைச்சலுடனும் இருந்துள்ளாா்.
இந்நிலையில் பிரபாவதியும், அவரது மகள் சொப்னா (12) ஆகிய இருவரும் திங்கள்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா். இது குறித்து மடிப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனா்.