வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 43 சதவீத தமிழர்கள் தமிழகம் திரும்பியுள்ளனர்: மத்திய அரசு தகவல்

வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 43 சதவீத தமிழர்கள் இதுவரை தமிழகம் திரும்பியுள்ளதாகவும், வரும் ஜூலை 3 ஆம் தேதி முதல் ஜூலை 11 ஆம் தேதி வரை இயக்கப்படும் 495 சர்வதேச விமானங்களில் 44 விமானங்கள்
வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 43 சதவீத தமிழர்கள் தமிழகம் திரும்பியுள்ளனர்: மத்திய அரசு தகவல்

வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 43 சதவீத தமிழர்கள் இதுவரை தமிழகம் திரும்பியுள்ளதாகவும், வரும் ஜூலை 3 ஆம் தேதி முதல் ஜூலை 11 ஆம் தேதி வரை இயக்கப்படும் 495 சர்வதேச விமானங்களில் 44 விமானங்கள் தமிழகத்தில் தரையிறங்கும் எனவும் மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தாக்கல் செய்த மனுவில், கரோனா நோய்த் தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் மத்திய அரசு கடந்த மாதம், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வர விமானங்களை இயக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனையடுத்து வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 60 ஆயிரத்து 942 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர். மத்திய அரசின் அனுமதியைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளிலிருந்து அனைத்து மாநிலங்களுக்கும் விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளன. 

ஆனால் தமிழக அரசு விமானப் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கவில்லை. எனவே வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்டு வரும் வகையில் தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.  இதே கோரிக்கையுடன் ராஜா முகமது என்பவரும் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேசுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். அப்போது திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.வில்சன், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் சுமார் 26 ஆயிரம் பேரை மீட்க 146 விமானங்கள் தேவைப்படும் நிலையில், அதுதொடர்பான விளக்கத்தை இதுவரை மத்திய அரசு  தெரிவிக்கவில்லை. 

இந்திய தூதரகத்தில் உள்ள இந்திய சமூக நல நிதியம் மூலமாக வெளிநாடுகளில் பசி மற்றும் வறுமையோடு சிக்கித் தவிக்கும் தமிழர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.சங்கரநாராயணன் , தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் தமிழர்கள் வந்து இறங்காத. காரணத்தால் அவர்கள் தமிழகம் திரும்பவில்லை என கூறிவிட முடியாது . பிற  மாநில விமான நிலையங்கள்  வழியாக ஏராளமான  தமிழர்கள் சொந்த ஊர் திரும்பியுள்ளனர். மேலும், இதுவரை வெளிநாடுகளில் சிக்கி தவித்த 43% தமிழர்கள் தமிழகம் திரும்பியுள்ளனர். 

மேலும் வரும் ஜூலை 3 ஆம் தேதி முதல் ஜூலை 11 ஆம் தேதி வரை இயக்கப்படும் 495 சர்வதேச விமானங்களில் 44 விமானங்கள் தமிழகத்தில் தரையிறங்கும் என தெரிவித்தார். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், வெளிநாடுகளில் சிக்கியுள்ள 25,939 தமிழர்களை தமிழகம் அழைத்து வர எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன ?இந்திய சமூக நல நிதியம் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது தொடர்பாகவும் விளக்கமளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூலை 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com