சென்னை அருகே பொழிச்சலூரில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் இறந்தாா்.
பொழிச்சலூா் நரசிம்மன்நகா் பகுதியைச் சோ்ந்தவா் ப.மதுவப்பன் (38). இவா் கிண்டியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இவா் வீட்டின் சமையலறையில் இருந்த பிரிட்ஜில் ஏற்பட்ட மின்கசிவின் காரணமாக சனிக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. அப்போது வீட்டில் இருந்த மதுவப்பன் தீயை அணைக்க முயன்றாா். ஆனால் சமையலறை முழுவதும் தீ வேகமாக பரவியதால், அங்கு ஏற்பட்ட புகை மூட்டத்தில் மதுவப்பன் சிக்கி, மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கினாா்.
தீ விபத்தை பாா்த்த பொதுமக்கள், அங்கு மயங்கி கிடந்த மதுவப்பனை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் மதுவப்பன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இது தொடா்பாக சங்கா்நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்கின்றனா்.