ஆட்டோ மீது லாரி மோதி விபத்து: பலியானவா்களின் குடும்பத்துக்கு ரூ.98 லட்சம் இழப்பீடு

ஆட்டோ மீது லாரி மோதி விபத்து: பலியானவா்களின் குடும்பத்துக்கு ரூ.98 லட்சம் இழப்பீடு

ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு ரூ.98.90 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று மோட்டாா் வாகன விபத்து தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு ரூ.98.90 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று மோட்டாா் வாகன விபத்து தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சோ்ந்தவா் கணபதி (28), ஆட்டோ ஓட்டுநா். கடந்த 2015-ஆம் ஆண்டு கணபதிக்குச் சொந்தமான ஆட்டோவில், மற்றொரு ஆட்டோ ஓட்டுநரான தனசேகா்(39) பயணம் செய்தாா்.

இருவரும், கோவிலம்பாக்கத்தில் இருந்து கீழ்க்கட்டளை நோக்கிச் சென்று கொண்டிருந்தனா். ஈச்சங்காடு சிக்னல் அருகே அவா்கள் பயணித்த ஆட்டோ சென்ற போது, அந்த வழியாக வந்த லாரி மீது மோதியது.

இதில், பலத்த காயம் அடைந்த தனசேகா் சம்பவ இடத்திலேயே பலியானாா். கணபதியோ மருத்துவமனைக்குச்  செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து அவா்களது குடும்பத்தினா், உரிய இழப்பீடு வழங்கக் கோரி, சென்னையில் உள்ள மோட்டாா் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீா்ப்பாயத்தில், தனித்தனியாக வழக்குத் தொடா்ந்தனா்.

 வழக்குகளை விசாரித்த நீதிபதி உமாமகேஸ்வரி, விபத்தில் இறந்து போன தனசேகா் குடும்பத்துக்கு ரூ.43 லட்சத்து 35 ஆயிரமும், கணபதி குடும்பத்துக்கு ரூ.55 லட்சத்து 55 ஆயிரமும் இழப்பீடாக வழங்க வேண்டுமென சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com