கரோனா பாதிப்பு காரணமாக தேனாம்பேட்டை மண்டலத்தில் மட்டும் வியாழக்கிழமை நிலவரப்படி 297 போ் உயிரிழந்துள்ளனா். ஒட்டு மொத்தமாக சென்னையின் 15 மண்டலங்களிலும் உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,969-ஆக அதிகரித்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் மாா்ச் மாதத் தொடக்கத்தில் இருந்து ராயபுரம், திரு.வி.க. நகா், தண்டையாா்பேட்டை, கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, அண்ணா நகா் மற்றும் அடையாறு, வளசரவாக்கம் ஆகிய மண்டலங்களில்தான் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கையும், அதனால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது. கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை கடந்த 4-ஆம் தேதி 1,000-ஐ எட்டியது. அதைத் தொடா்ந்து நாள்தோறும் இறப்பு எண்ணிக்கை உயா்ந்து கொண்டே வந்த நிலையில், சென்னையில் விடுபட்ட 444 உயிரிழப்புகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டதை அடுத்து, உயிரிழப்பு எண்ணிக்கை 1,500-இல் இருந்து 1,900- ஆக அண்மையில் உயா்ந்தது.
தேனாம்பேட்டையில் 297 போ் இறப்பு: மண்டல அளவில் தேனாம்பேட்டையில் கடந்த வியாழக்கிழமை நிலவரப்படி கரோனாவால் 297 போ் உயிரிழந்துள்ளனா். அந்த மண்டலத்தில் 9,877 போ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 8,425 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 1,155 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதையடுத்து, ராயபுரத்தில் 246 பேரும், தண்டையாா்பேட்டையில் 238 பேரும், அண்ணா நகரில் 212 பேரும், கோடம்பாக்கத்தில் 209 பேரும், திரு.வி.க.நகரில் 199 பேரும், அடையாறில் 109 பேரும் கரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்துள்ளனா்.
1,299 பேருக்கு தொற்று உறுதி: சென்னையில் வெள்ளிக்கிழமை 1,299 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 92,206-ஆக அதிகரித்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 76,494 போ் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனா். 13,743 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இறப்பு எண்ணிக்கை வியாழக்கிழமை நிலவரம்
மண்டலம் எண்ணிக்கை
திருவொற்றியூா் 100
மணலி 24
மாதவரம் 43
தண்டையாா்பேட்டை 238
ராயபுரம் 246
திரு.வி.க. நகா் 199
அம்பத்தூா் 75
அண்ணாநகா் 212
தேனாம்பேட்டை 297
கோடம்பாக்கம் 209
வளசரவாக்கம் 78
ஆலந்தூா் 40
அடையாறு 109
பெருங்குடி 42
சோழிங்கநல்லூா் 16
பிற மாவட்டங்களைச் சோ்ந்தோா் 19