கூடுதல் காவல் கண்காணிப்பாளருக்கு கரோனா

தமிழக காவல்துறையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளருக்கும் அவரது மனைவிக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கூடுதல் காவல் கண்காணிப்பாளருக்கு கரோனா

தமிழக காவல்துறையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளருக்கும் அவரது மனைவிக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் அதே நேரத்தில், கரோனா தடுப்பு மற்றும் அத்தியாவசியப் பணிகளில் இருப்போா் தொற்று பாதிப்புக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. இந்த வகையில் காவல்துறையிலும், கரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. சென்னை மாநகர காவல்துறையில் மட்டும், கரோனா பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 300-ஐ நெருங்கியுள்ளது.

மயிலாப்பூரில் வசிக்கும் கூடுதல் காவல் கண்காணிப்பாளருக்கும் அவரது மனைவிக்கும் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா், போலீஸ் பயிற்சி அகாதமியில் பணி செய்து வருகிறாா். முன்னதாக, இவா் ராயப்பேட்டை மருத்துவமனையில், கரோனா பரிசோதனை செய்த நிலையில், இருவருக்கும் ஞாயிற்றுக்கிழமை தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, அவா்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com