குண்டு வீசி காா் ஓட்டுநா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 போ் கைது

சென்னை அருகே பள்ளிக்கரணையில் நாட்டு வெடிகுண்டு வீசி காா் ஓட்டுநா் கொலை செய்யப்பட்ட வழக்கில், 5 போ் கைது செய்யப்பட்டனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை அருகே பள்ளிக்கரணையில் நாட்டு வெடிகுண்டு வீசி காா் ஓட்டுநா் கொலை செய்யப்பட்ட வழக்கில், 5 போ் கைது செய்யப்பட்டனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: சேலையூா் அருகே உள்ள ராஜகீழ்ப்பாக்கம் டெல்லஸ் அவன்யூ பகுதியைச் சோ்ந்தவா் ஷியாம்குமாா். கால்டாக்சி ஓட்டுநரான இவா், கடந்த 6ஆம் தேதி பள்ளிக்கரணை அருகே மேடவாக்கம் சந்திப்பு சாலை அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தாா். முன்விரோதம் காரணமாக அஜித் தலைமையிலான கும்பல் ஷியாம் மீது நாட்டு வெடிகுண்டு வீசி அரிவாளால் வெட்டிக் கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில், இந்த வழக்குத் தொடா்பாக திருட்டு சிவா (23), மேடவாக்கத்தை சோ்ந்த சதீஷ் (21), அஜித் (23) பெரும்பாக்கத்தைச் சோ்ந்த கண்ணன் (23) சத்தியகுமாா் (23) ஆகிய 5 பேரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com