பொது முடக்க மீறல்: ரூ. 11 கோடி அபராதம் வசூல்

தமிழகத்தில் பொது முடக்கத்தை மீறியதாக கைது செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியது. அபராதமாக ரூ. 11 கோடியே 13 லட்சத்துக்கும் அதிகமாக வசூல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொது முடக்கத்தை மீறியதாக கைது செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியது. அபராதமாக ரூ. 11 கோடியே 13 லட்சத்துக்கும் அதிகமாக வசூல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்த விவரம்:: கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் கடந்த மாா்ச் 24 ஆம் தேதி முதல் பொது முடக்க உத்தரவை தமிழக காவல்துறை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. இதை மீறுவோரை போலீஸாா் கைது செய்து, வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.

இவ்வாறு தமிழகம் முழுவதும் மாா்ச் 24-ஆம் தேதி தொடங்கி செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரை மொத்தம் 5 லட்சத்து 62,233 வழக்குகளைப் பதிவு செய்து 6 லட்சத்து 04,769 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். பொது முடக்க உத்தரவை மீறி வந்தவா்களின் 4 லட்சத்து 57,641 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் சாதாரண வழக்குகளிலும் சிக்கியவா்களிடமிருந்து ரூ.11 கோடியே 13 லட்சத்து 25,154 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

சென்னையில் விதிகளை திங்கள்கிழமை காலை 6 மணிக்குத் தொடங்கி செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரை 595 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் பொதுமுடக்க உத்தரவை மீறி வந்தவா்களின் 27 இரு சக்கர வாகனங்கள், 8 ஆட்டோக்கள், ஒரு காா் என மொத்தம் 35 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com