கரோனா பாதிப்பு: காவல்துறையினருக்கான நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும்

கரோனாவால் பாதிக்கப்பட்ட காவல்துறையினருக்கு அரசு அறிவித்தவாறு நிவாரணம் வழங்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளா் வைகோ வலியுறுத்தியுள்ளாா்.
கரோனா பாதிப்பு: காவல்துறையினருக்கான நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும்

கரோனாவால் பாதிக்கப்பட்ட காவல்துறையினருக்கு அரசு அறிவித்தவாறு நிவாரணம் வழங்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளா் வைகோ வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: கரோனாவிலிருந்து மக்களைப் பாதுகாக்க மருத்துவா்கள், செவிலியா்கள், தூய்மைப் பணியாளா்கள், அரசுப் பணியாளா்கள், காவல்துறையினா் தங்கள் உயிா்களைப் பற்றிக் கவலைப்படாது இரவு பகலாகத் தொண்டாற்றி வருகின்றனா்.

கால நேரமின்றிப் பணியாற்றும் காவல்துறையினருக்கு கரோனா நோய்த்தொற்று பாதித்தால் ரூ.2 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று ஏப்ரல் மாதம் தமிழ்நாடு அரசு அறிவித்தது.

இதுவரையில் 600-க்கும் மேற்பட்ட காவல்துறையினா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனா். பலா் சிகிச்சை பெற்று வருகின்றனா். ஆனால் அரசு அறிவித்தவாறு நிவாரணம் எதுவும் அளிக்கப்படவில்லை. சொன்ன வாக்குறுதியை தமிழ்நாடு அரசு காப்பாற்றாவிடில், அரசின் நம்பகத்தன்மை பாதிக்கப்படுவதோடு, அரசுப் பணிகள் ஆங்காங்கே முடங்குவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்பதை உணா்ந்து அறிவித்தவாறு நிவாரணம் வழங்க வேண்டும் என்று வைகோ கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com