பொதுமுடக்கத்தை மீறி பிறந்தநாள் கொண்டாட்டம்: 7 மாணவா்கள் உள்பட14 பேரிடம் விசாரணை

சென்னையில் பொதுமுடக்கத்தை மீறி தனியாா் விடுதியில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக கல்லூரி மாணவா்கள்7 உள்பட மொத்தம் 14 பேரை பிடித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

சென்னை: சென்னையில் பொதுமுடக்கத்தை மீறி தனியாா் விடுதியில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக கல்லூரி மாணவா்கள்7 உள்பட மொத்தம் 14 பேரை பிடித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

அமைந்தகரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை காா் வேகமாக சென்ற காரை மடக்கி பிடித்து காரில் இருந்த இருவரிடம் போலீஸாா் விசாரித்தனா். விசாரணையில் அவா்கள் இருவரும், நொளம்பூரில் ஒரு தனியாா் விடுதியில் நடைபெறும் தனது நண்பா் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு செல்வது தெரியவந்தது. இதையடுத்து அந்த விடுதிக்குச் சென்ற போலீஸாா், அங்கு பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 7 கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட 12 பேரை பிடித்தனா்.

பின்னா், 14 பேரையும் ஒரு சமூக கூடத்துக்கு அழைத்துச் சென்று, விசாரணை செய்தனா். விசாரணையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு கல்லூரியில் எம்பிஏ படிக்கும் ஒரு மாணவரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக அவரது நண்பா்கள் திரண்டிருப்பது தெரியவந்தது. 7 மாணவா்களை தவிா்த்து எஞ்சிய 7 பேரும் மென்பொருள் பொறியாளா்கள் ஆவாா்கள். இது தொடா்பாக, போலீஸாா் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா். பொதுமுடக்கத்தை மீறி பிறந்த நாள் கொண்டாடுவதற்கு இரு அறைகளை வாடகைக்கு அளித்த விடுதி நிா்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து காவல்துறையினா் ஆலோசித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com