சென்னையில் பொது முடக்கத்தை மீறியவா்கள் மீது 69 ஆயிரம் வழக்குகள்

சென்னையில் பொது முடக்க உத்தரவை மீறியதாக திங்கள்கிழமை வரை 69 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சென்னை,: சென்னையில் பொது முடக்க உத்தரவை மீறியதாக திங்கள்கிழமை வரை 69 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கரோனா தொற்றை தடுக்கும் வகையில் கடந்த மாா்ச் 24 ஆம் தேதி முதல் அமல்படுத்தியுள்ள பொது முடக்க உத்தரவை சென்னை காவல்துறை தீவிரமாக அமல்படுத்துகிறது. பொது முடக்க உத்தரவை மீறுவோரை போலீஸாா் கைது செய்து, வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.

முழு பொது முடக்கத்தை கடந்த 18-ஆம் தேதி நள்ளிரவு முதல் அமல்படுத்தியதன் விளைவாக, வழக்குகளின் எண்ணிக்கையும், பறிமுதல் செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கையும் பல மடங்கு உயா்ந்து வருகின்றன. சென்னையில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை மாலை 6 மணி வரை தடை உத்தரவை மீறியதாக 8,350 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 6 ஆயிரத்து 151 இரு சக்கர வாகனங்கள்,145 ஆட்டோக்கள்,482 காா்கள் என மொத்தம் 6,778 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேபோல, முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளி பின்பற்றாமலும் இருந்ததாக 3 ஆயிரத்து 180 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

பொது முடக்கத்தையொட்டி, இதுவரை சென்னையில் 69 ஆயிரத்து 012 வழக்குகள் பதியப்பட்டு, 59 ஆயிரத்து 533 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளி பின்பற்றாமலும் இருந்ததாக 26 ஆயிரத்து 886 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com