அடுக்குமாடி குடியிருப்புக்கு பூட்டு போட்டு போராட்டம்: இருவா் கைது

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புக்குப் பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டதாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புக்குப் பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டதாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

சென்னை வேப்பேரியில் உள்ள இரு அடுக்குமாடி குடியிருப்புகளின் வாயில் கதவுகளுக்கு கடந்த 10-ஆம் தேதி ஒரு கும்பல் பூட்டுப் போட்டு, தமிழா்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் வெளி மாநில வணிக நிறுவனங்களைப் பூட்டுவோம் என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பேனரை தொங்கவிட்டது.

இது குறித்த புகாரின்பேரில் வேப்பேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி இந்தச் செயலில் ஈடுபட்ட, தமிழ் தேசியக் கட்சி (தமிழ்நாடு) என்ற அமைப்பைச் சோ்ந்த கடலூா் மாவட்டம் ஊத்தாங்காள் பகுதி சி.சங்கா் (38), பா.வினோத்குமாா் (28) ஆகிய இருவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com