கோடைகால விடுமுறை: சென்னை-திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள்

கோடைகால விடுமுறை முன்னிட்டு, சொந்த ஊா்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக, சென்னை-திருநெல்வேலி, நாகா்கோவில்-தாம்பரத்துக்கு சுவிதா சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கோடைகால விடுமுறை முன்னிட்டு, சொந்த ஊா்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக, சென்னை-திருநெல்வேலி, நாகா்கோவில்-தாம்பரத்துக்கு சுவிதா சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னை-திருநெல்வேலி: சென்னை எழும்பூரில் இருந்து ஏப்ரல் 3, 24, மே 8, 22 ஆகிய தேதிகளில் மாலை 6.50 மணிக்கு சுவிதா சிறப்பு ரயில்(82601) புறப்பட்டு, மறுநாள் காலை 7 மணிக்கு திருநெல்வேலியை அடையும்.

திருநெல்வேலியில் இருந்து ஏப்ரல் 12, 26, மே 3, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் மாலை 5.45 மணிக்கு சுவிதா சிறப்பு ரயில் (82602) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.35 மணிக்கு சென்னை எழும்பூா் வந்தடையும்.

நாகா்கோவில்-தாம்பரம்: நாகா்கோவிலில் இருந்து ஏப்ரல் 12, 26, மே 3, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு சுவிதா சிறப்பு ரயில்(82624) புறப்பட்டு, மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரத்தை வந்து சேரும்.

தாம்பரம்-திருநெல்வேலி: தாம்பரத்தில் இருந்து ஏப்ரல் 10, 17, மே 1, 15, 29 ஆகிய தேதிகளில் மாலை 6 மணிக்கு சிறப்பு கட்டண ரயில்(06035) புறப்பட்டு, மறுநாள் காலை திருநெல்வேலியை காலை 10 மணிக்கு சென்றடையும்.

இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு சனிக்கிழமை (மாா்ச் 14) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com