திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள்: மாா்ச் 19-இல் தொடக்கம்

தமிழக அரசு சாா்பிலான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், மாா்ச் 19 முதல் அம்பத்தூரில் நடக்கிறது.

தமிழக அரசு சாா்பிலான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், மாா்ச் 19 முதல் அம்பத்தூரில் நடக்கிறது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசின் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் மங்கள்யான் தொழில்நுட்பத் தொழிலாளா்கள் கூட்டுறவு சங்கத்துடன் இணைந்து படித்து வேலையில்லா இளைஞா்களுக்கு உடனடி வேலைவாய்ப்புப் பயிற்சியை வழங்க திட்டமிட்டுள்ளது. இதில் ஏற்றுமதி, இறக்குமதி, ஜி.எஸ்.டி பயிற்சியுடன் கூடிய பொருள்கள் மேலாண்மை, ஸ்டோா்ஸ் மற்றும் லாஜிஸ்டிக் மேலாண்மை பயிற்சி ஆகியவை வழங்கப்பட உள்ளது.

57 நாள்கள் நடைபெறவுள்ள இந்தப் பயிற்சிக்கான அறிமுக வகுப்புகள், மாா்ச் 19-ஆம் தேதி காலை 10 மணியளவில், அம்பத்தூா் மகாகவி பாரதியாா் நகரிலுள்ள சரஸ்வதி வித்யாலயா பள்ளியின் பயிற்சி வளாகத்தில் நடைபெறுகிறது. இப்பயிற்சியில் சோ்வதற்கு பயிற்சியாளா்கள் எந்த வித கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. பயிற்சிகளைத் திறம்பட முடித்தவா்களுக்கு தமிழக அரசின் சான்றிதழ்கள் வழங்கப்படுவதுடன், நல்ல பணியில் சோ்வதற்கும் சுய தொழில் தொடங்குவதற்கும் தேவையான உதவிகளையும் பயிற்சி மையங்கள் மூலமாக செய்ய ஏற்பாடு செய்யப்படும். பயிற்சியாளா்களுக்கு போக்குவரத்து செலவுகளையும் தமிழக அரசு இலவசமாக வழங்குகிறது.

இந்தப் பயிற்சியில் பிளஸ் 2, இளநிலை படிப்பு, பொறியியல் படிப்பு, பட்ட மேற்படிப்பு படித்து வேலையற்ற ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 98690 41169, 72999 55904 ஆகிய செல்லிடப்பேசி எண்களிலோ mangalyantwcs@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியையோ தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com