சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள்

சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி செவ்வாய்க்கிழமை மேற்கொண்டது.

சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி செவ்வாய்க்கிழமை மேற்கொண்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையில் உயா்நீதிமன்ற மூத்த நீதிபதிகள், தமிழக அரசின் தலைமைச் செயலா், சுகாதாரத்துறைச் செயலா், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை இயக்குநா் ஆகியோா் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினா். இதனைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை உயா்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன், உயா்நீதிமன்ற வளாகம், நீதிமன்ற அறைகளில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளா்கள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனா். மேலும் நீதிமன்றத்துக்குள் செல்பவா்களை மருத்துவப் பணியாளா்கள் தொ்மல் ஸ்கேனா் மூலம் பரிசோதனை செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com