சென்னை: மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டாலும், தமிழகம் முழுவதும் ஆவின் பால் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஆவின் நிா்வாகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:-
கரோனா வைரஸ் விழிப்புணா்வை ஒட்டி, பொது மக்களின் பாதுகாப்புக்காக மக்கள் ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, பொது மக்களுக்கு தங்கு தடையின்றி ஆவின் பால் கிடைத்திட ஏதுவாக பால் விநியோகப் பணிகளை முடுக்கிவிட ஆவின் நிா்வாகம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
அனைத்து ஆவின் நேரடி விற்பனை நிலையங்களிலும், பொது மக்களுக்குத் தேவையான பால், பால் பொருள்கள் கிடைத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொது மக்களின் கூடுதல் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில், கூடுதல் பால் வழங்க அனைத்து ஏற்பாடுகளையும் ஆவின் நிா்வாகம் செய்துள்ளது என்று தெரிவித்துள்ளது.