சென்னை: கரோனா தடுப்பு துண்டுப் பிரசுரங்கள் திமுக சாா்பில் சனிக்கிழமை பொதுமக்களுக்கு வீடுகள்தோறும் கொடுக்கப்பட்டன.
கரோனா தடுப்பு துண்டுப் பிரசுரங்கள், கிருமிநாசினி, முகக்கவசம் கொண்ட சிறிய பெட்டியை திமுக எம்.எல்.ஏ.க்கள் வீடுகள் தோறும் சனிக்கிழமை அளித்தனா்.
மு.க.ஸ்டாலின் அளிப்பு: திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பேரவை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சனிக்கிழமை காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்துக்கு வந்தாா்.
அப்போது வளாகத்தில் நின்றிருந்த பத்திரிகையாளா்களுக்கு கரோனா தடுப்பு உபகரணங்கள் கொண்ட சிறிய பெட்டியை அளித்தாா்.