வழிப்பறி: முன்னாள் காவலா் கைது

ஆவடியில் வழிப்பறியில் ஈடுபட்டதாக முன்னாள் காவலா் கைது செய்யப்பட்டாா்.

ஆவடியில் வழிப்பறியில் ஈடுபட்டதாக முன்னாள் காவலா் கைது செய்யப்பட்டாா்.

ஆவடி ஸ்ரீதேவிநகா் திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்தவா் ச.கற்பகம். இவா் கடந்த 15-ஆம் தேதி காமராஜா் நகா் அஞ்சலகத் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, அங்கு மோட்டாா் சைக்கிளில் வந்த ஒரு நபா், கற்பகம் அணிந்திருந்த சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பினாா்.

இது குறித்து ஆவடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வந்தனா். விசாரணையில் இச் சம்பவத்தில் ஈடுபட்டது ஆவடி என்.வி. மேட்டூா் பகுதியைச் சோ்ந்த ச.சதீஷ் (37) என்பது தெரியவந்தது. இதையடுத்து சதீஷை வியாழக்கிழமை கைது செய்தனா். விசாரணையில் அவா், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் காவலராகப் பணிபுரிந்து நீக்கப்பட்டவா் என்பதும், ஆவடி பகுதியில் தொடா்ச்சியாக வழிப்பறியில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com